Wednesday, March 24, 2010

அக்கறை

தேஜாவுக்கு எப்போதும் பொருட்களின் மேல் அதீத அக்கறை . அவளது விளையாட்டு சாமான்களை ரொம்பவும் பத்திரமாகவே வைத்து கொள்வாள். இத்தனைக்கும் அவள் எதையாவது உடைத்தாலும் கூட நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் . அவள் விளையாட அவள் ஆராட்சி செய்ய உடைக்க தானே வாங்கி இருக்கிறோம், ஆனா அவ ரொம்ப பத்திரமா வெச்சிருக்கறது தான் எனக்கு கவலைய இருக்கு, எப்பவும் அவள சுத்தி அவளோட திங்க்ஸ் இருக்க வேண்டும், அவளோட சைக்கிள்ல மூட்ட மூட்டையா அடுக்கி வெச்சு இருப்பா, எதாவது புதுசா வாங்கி கொடுத்தா அன்னைக்கு நைட் கண்டிப்பா அவ கூட தான் அந்த பொருளும் தூங்கும்,யாரவது எடுத்துட்டு போய்டுவாங்களாம்.  இதை மாற்ற நாங்களும் எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டோம், ஆனாலும் அவளின் இந்த பழக்கத்தை மாற்ற முடிய வில்லை.
நேற்றும் அப்படி தான் கொஞ்சம் வளையலும் ஹேர் கிளிப் உம் வாங்கி கொடுத்தேன் . வளையல் மட்டும் அணிந்து கொண்டாள். மற்றவை வழக்கம் போல தலையணை பக்கத்தில் தான், இன்று அந்த ஹேர் கிளிப் போட மறுக்கிறாள்,  கேட்டால் ஸ்கூல், க்கு தான்  போட்டுட்டு போவாளாம். இன்னும் 2 1 /2  மாசத்துக்கு வீட்ல குப்பை தான் .எல்லா பெண் குழந்தைகளும் இப்படிதான் இருக்காங்களா, இல்ல இந்த பழக்கம் அவ வளர வளர சரியாயிடுமா தெரியல,
----------------------------------------------------------------------------------------------

Wednesday, March 17, 2010

புலம்பல்

தேஜாவுக்கு இந்த வாரத்துடன் பள்ளி நிறைவு பெறுகிறது, எனக்கு டென்ஷன் ஆரம்பிச்சாச்சு, எனன செய்யறது இன்னும் இரண்டரை மாதங்கள், தேஜாவும் ரஞ்சித்தும் (அண்ணா பையன்) பண்ற அட்டுழியம் தாங்க முடியாது .நாம வீட்ல இருந்தா ஏதாவதொரு ஆக்டிவிட்டில நேரம் போய்டும், நாம காலையில ஆபீஸ் வந்தா போற டைம் சொல்ல முடியாது, இப்போதைக்கு எங்க அம்மா தான் பார்த்துக்கறாங்க, அவங்களுக்கும் இப்ப உடம்பு சரி இல்ல , மாமியாரோ ஹார்ட் பேசன்ட்,
எதாவது கேம்ப்க்கு அனுபலம்னா அதுக்கான வயசும் இல்ல, 3 ,3 1 / 2  வயசு குழந்தைகள வெச்சு எனன பண்றது, அப்படியே எதாவது பாட்டு கிளாஸ் , டான்ஸ் கிளாஸ்ல  விட்டாலும் 1  மணி நேரம் தான் . அதுக்கு அப்புறம் ?

ஸ்கூல் இருக்கற நேரங்கள்ல சாப்பிடறதும், தூங்கறதும் நேர நேரத்துக்கு நடக்கும் இனி மேல் அது சாத்தியம் இல்ல, காலையில ஸ்கூல் கிளம்பற அவசரத்துல ஆட்டோ வந்துடும்னு சொல்லியே எதாவது ஊட்ட முடியும், இனி சாப்பிட  (நாம கிளம்பறதுக்கு உள்ள ஒரு வேலை முடியுமேன்னு) சொன்னா  "எனக்கு பசிக்க்கலாமா"னு சொல்லுவா எங்க வீட்டு பெரிய மனுசி (தேஜா தான்) .
 தூங்கறதுக்கும் அப்படிதான் ...

எனன மாதிரியான தாய்மார்கள் எனன பண்றாங்கன்னு தெரியல , யாராவது ஒரு ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்.... ப்ளீஸ்....

Sunday, March 14, 2010

நிறங்கள்

சமீபத்தில் ஆனந்த விகடனில் திரு. கோபிநாத் அவர்கள் நிறங்களை பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதை படிக்கும் போது எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது,

நான் சிறுவயதில் நன்றாகவே படிப்பேன். முதல் இரண்டு , மூன்று ரேங்க்குக்குள் எடுக்கும் அளவிற்கு (சத்தியமாக) .   எந்த வேலையையும் என்னிடம் கொடுத்தால் பொறுப்பாகவும் முடிப்பேன் ,  சில நேரங்களில் பரீட்சை விடை தாள்களை திருத்தும் பணியையும் ஆசிரியர்கள்  எங்களிடம் தருவார்கள்.

ஆனால் எங்கள் பள்ளிக்கு யாரவது சிறப்பு விருந்தாளிகள்
வந்தால் மட்டும் அவர்களை வரவேற்க அனுப்ப மாட்டார்கள், ஏன்னா நாங்க எல்லாம்  மாநிறமாக இருக்கும் காரணத்தால் , அந்த வயதில் எதிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ கோளாறு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் எதுலயும் விருப்பம் இல்லாமல் அழகுல மட்டும் தனி கவனம் செலுத்த ஒரு கூட்டம் இருக்கும், நல்லா நிறம் கொண்ட அந்த பெண்கள் எல்லாம் எங்கள் வகுப்பை சேர்ந்த ஆனால் பெரிய பெண்கள், அவர்களாக எதாவது பேசி அவர்களாக  சிரித்து கொண்டே இருப்பார்கள், எதற்காக சிரிக்கிறார்கள் என்று புரியாமல் இருக்கற கூட்டம் நம்முடையது, அதுக்கு மேல கேட்டா நீங்கள்லாம்
சின்ன பொண்ணுங்க உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாதுன்னு சொல்லுவாங்க.

அந்த பெண்களை மட்டுமே தெரிவு செய்து அந்த சிறப்பு விருந்தினர்க்கு அன்பளிப்பு அளிக்க செய்யும் போது எங்களை போல சிலருக்கு எப்படி இருக்கும்? அந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்போம்  .அப்ப தான் நாமளும் சிவப்பா பிறக்கலேன்னு தோன்றியது . நாமாக நிறத்தை பற்றிய ஒரு எண்ணத்தை நினைக்காத போதும் , அந்த பாகுபாட்டை பள்ளிகளே செய்தன .
(ஆனா நல்லா படிக்கற பொண்ணுங்க எல்லாம் சுமாராத்தான் இருப்பாங்களோ! எங்க கிளாஸ்ல அப்படி தான் இருந்தோம் .)

டீன் ஏஜ்ஜில் நிறம் ஒரு பெரிய பிரச்சனையே . நானும் என் மற்ற மாநிற தோழியரும் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களையும் வாங்கி முயற்சித்தோம், ஒன்றும் பலன் இல்லை, (அப்ப நடந்த சில போட்டிகளில் நாங்க கலந்துக்கவே இல்ல வேணும்னே தான் )அந்த சமயத்துல தான்  எங்களது ஆதங்கத்தை எங்கள் கணித ஆசிரியருடன் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது இது தான் , (அவர் எப்போதும் நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார்).  இன்னும் உன் திறமையை  வளர்த்து கொள் . உன் திறமையை கண்டு பலரும் உன்னை திரும்பி பார்க்கும் படி செய் என்று என்னையும் என் தோழியரையும் உற்சாக படுத்தினார்கள்.
அழகுங்கறது நிரந்தரம் இல்லன்னும் சொன்னார். அதுக்கு அப்புறமா அழகுக்காக செலவு செய்ய, நேரமோ , பணமோ செலவழிக்க வில்லை,

அதன் பின் இன்னும் அதிகமாகவே  படித்தோம் அவர் சொன்னது போல நல்ல மதிப்பெண்களையும் பெற்று,  இன்று நன்றாகவே இருக்கிறேன் , எங்கோ கேள்வி பட்டது ,

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்
கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்பு தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதனின் எண்ணங்களில் இருக்கிறது.................

Thursday, March 4, 2010

யாருக்கும் வெட்கமில்லை

கடந்த 2 நாட்களாக பரபரப்பான செய்தியே பரமஹம்ச நித்யானந்தர் பற்றியது தான்.
இந்த விசயத்திற்கு இவ்வளவு ஆர்பாட்டம்  வேண்டுமா? இதில் நித்யானந்தர் செய்தது மட்டும் தான் குற்றமா.? என்னை நம்ம்புங்கள்  என்று அவனா சொன்னான், அவனது பேச்சும் கருத்துக்களும் பிடித்ததென்று பின்னாலயே சென்றதே ஒரு கூட்டம் அவர்கள் மேல் பிழை இல்லையா?  காவி உடுத்தி கொண்டு யார் எனன சொன்னாலும் கேட்க்க ஆட்டு மந்தையாய் சுற்றிய கூட்டதார்க்கு எங்கு சென்றது அறிவு,

அவனது லீலையை வெளிகொன்று வரும் பொருட்டு அந்த பெண்ணின் மானமும் அல்லவா போகிறது . இதில் கண்டிப்பாக அந்த பெண்ணை குறை சொல்ல முடியாது  ஒரு பெண் தனக்கு பிடித்தமானவருடன் இருக்கிறாள்,இதை எப்படி குறை சொல்ல முடியும் ?அது சரியோ தவறோ அவளுக்கு பிடித்தது ,ஆனால் அவளுக்கும் வெட்கம் இருக்கும்,

 அந்த அந்தரங்கத்தை பறை சாற்றிய ஊடகம்  செய்தது மட்டும் சரியாகுமா?
ஊடகத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது . இப்படி ஒரு விஷயத்தை அப்பட்டமாக பட்ட பகலில் காண்பிப்பது சரியா? ஒவ்வொரு பதினனது நிமிடத்திற்கு ஒரு முறை , இதுவும்  ப்ளூ பிலிம் மாதிரி தானே ? அந்த சேனலின் T R B  ரேட் உயர்வதற்காக எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாமா? அப்ப அவர்களின் வக்கிர எண்ணங்களை எனன சொல்ல்வது?
10 மணி செய்திகளுக்கென்று ஒரு சிறப்பே இருக்கிறது, அன்றைய நாளின் மொத்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும் , சில குடும்பங்களில் ஒரு வழக்கம் உண்டு, 10 மணி செய்தியை குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக தான் பார்ப்பார்கள், இதில் நடுத்தர வயதுள்ள குழந்தைகளும் அடங்கும், செய்திகளுக்கான சேனலில் இப்படி கொஞ்சம் கூட சமுக அக்கறை இல்லாமல் நடந்நது கொண்ட அந்த தொலை காட்சியை எனன சொல்வது , முன்பெல்லாம் இது மாதிரியான செய்திககள்
காண்பிக்கும் பொழுது நிறைய மறைக்க பட்டு சரியாக தெரியாதது மாதிரி இருக்கும் ஆனால் இப்போது அப்பட்டமாக காண்பிக்கிறார்கள் ,  குழந்தைகளுடன் நியூஸ் பார்க்க கூட முடிவதில்லை.

பிரேமானந்தா, அர்ச்சகர், கல்கி , நித்யானந்தர் இந்த வரிசையில் அடுத்தது யாரோ ????????
ஆக மொத்தத்தில் ஏமாற ஒரு கூட்டம் இருந்தால் ஏமாற்ற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.