Friday, April 23, 2010

காலையில் எழுந்த கோபம்

இன்று காலை 6  மணிக்கு கரண்ட் கட் . இந்த விஷயம் என் கோபத்திற்கு காரணம் அல்ல . இது நமக்கு பழகிப்போன ஒன்று தானே ... வெளிச்சமும், காற்றும் பற்றாகுறை காரணமாக ஜன்னல், கதவுகளை திறந்த போது கேட்ட உரையா(சா)டல் என்னை கோபத்தில் ஆழ்த்தியது.

எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருப்பவர்கள் காலையிலேயே வாசலில் அமர்ந்து கொண்டு அந்த வீட்டு மருமகளை பற்றிய பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போனார்கள். அந்த மகனும் சேர்ந்து கொண்டுதான்.

அந்த பெண்ணிற்கு (மருமகளுக்கு) குழந்தை பிறந்து (சிசேரியன்)  இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள் . இன்னும் இரெண்டொரு வீட்டுக்கு வந்துவிடுவார்களாம்.  அந்த பெண்ணின் அம்மா வீடு 2  தெரு தள்ளி தான் உள்ளது,  அம்மா வீடு பக்கத்தில் இருந்தாலும் சென்ற வாரம் வரை அந்த பெண் வேலைக்கும் சென்று வந்து , கணவன் வீட்டில் தான் இருந்தாள் ,  இப்ப பிரச்சனை என்னன்னா , குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை நேராக கணவன் வீட்டுக்கு தான் வரவேண்டுமாம் . அங்கு தான் குழந்தை வளர வேண்டுமாம் . அவளது வீட்டுக்கு எடுத்து செல்ல கூடாதாம் ,  கொஞ்ச நாள் தன அம்மா வீட்டில் தங்க விரும்புவதாக  அந்த பெண் தன கணவனிடம் சொல்லி இருக்கிறாள் போலும் . (எனக்கு தெரிந்து அந்த பெண் அதிர்ந்தும் கூட பேசமாட்டாள்) . இந்த விஷயத்தை தன அம்மாவிடம் சொல்லிகொண்டிருக்கிறான் அந்த பையன்
"அவ நேரா இங்க வராட்டி அவள diverse  பண்ணிவிடுவேன் , அப்படி எனன அம்மா வீடு கேட்க்குது , என் குழந்தையை நானே வளர்த்து கொள்வேன் , அவ ஒன்னும் தேவை இல்ல...................... " - இப்படி ஆணாதிக்கதோட பேசிட்டு இருந்தான் .

"diverse "  இந்த வார்த்தை எனன ஆண்களின் ஆயுதமா ? இதை சொல்லி பயமுறுத்த?
 பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண் என்றால் வேறு வழி இல்லாமல் நீ சொல்வதை  சகித்து கொள்ளலாம் . அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் , "சரிதான் போடா" என்று அந்த பெண் சொன்னால் இவனால் எனன செய்ய முடியும், அதிக பட்சம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடியும்? உன்னுடன் குடும்பம் நடத்தி உன் பிள்ளையை தானே சுமந்தாள்? அவளது வேதனையை , ஆசையை புரிந்து கொள்ள மாட்டாயா ?

ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த சமயத்தில், அவள் மனதில் சில குழப்பங்கள் வந்து தான் போகும் . எப்படி இந்த குழந்தை வளர்க்க போகிறோம் நல்ல தாயாக நம்மால் இருக்க முடியுமா? இப்படி. ............................ அதுமட்டும் இல்லாமல் உடல் ரீதியான பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். இதை எல்லாம் அம்மாவிடம் வெளிப்படியாக சொல்ல முடியும்,  மாமியாரிடம் சொல்ல முடியுமா ? சொல்லலாம் (!) அந்த மாமியாரும் நட்புடன், பாசத்துடன் தன் மகளை போல கவனித்து கொள்பவராய் இருக்கும் பட்சத்தில்.     

சில பெண்களுக்கு பிறந்த குழந்தையை சரியாக தூக்க கூட தெரியாது , குழந்தைக்கு அசௌகரியம் இல்லாம சரியாக பால் புகட்டவும் தெரியாது ,  அவளது உடலில் சோர்வும் நீங்க வேண்டும், அதற்க்கு சரியான ஓய்வு தேவை படும். 3 கிலோ குழந்தையை கூட ரொம்ப நேரம் வெச்சு இருந்தா கை, வயிற்று பகுதி எல்லாம் வலி ஏற்படும் . அந்த ஓய்வ மாமியார் வீட்ல எதிர் பார்க்க முடியாது , இப்ப இருக்கிற வயதானவர்களும் அந்த கால கட்டத்தை கடந்து வந்தவங்கன்னாலும் அவங்க கிட்ட இருந்து வர வார்த்தை "என்னமோ உலகத்துல இவ மட்டும் தான் பிள்ளைய பெத்த மாதிரி" . ரொம்ப தான் நடிக்கறா , எப்ப பார்த்தாலும் முடியலைன்னு ....நாங்கெல்லாம் அந்த காலத்துலன்னு தொடங்கி ......... ஆரம்பிச்சுடுவாங்க ,

அதோட அந்த பையன் தன் மாமியாரை  (மனைவியின் அம்மா) பற்றி நிரம்ப குறை சொல்லி கொண்டு இருந்தான் , அவர்களும் உன் அம்மாவிற்கு சமமானவர்கள் தானே? அவர்கள் தன் பெண்ணை கொஞ்ச நாட்கள் தன்னுடன் வைத்து  கொள்ள பிரிய படுகிறார்கள் . இதற்ககா இவ்வளவு ஏச்சுக்களும் , பேச்சுகளும் ?

ஆண்களே!  உங்களுக்கு எப்படி உங்க அம்மா, அப்பா முக்கியமோ அது போல தான் பெண்களுக்கும் , கல்யாணம் முடிஞ்சதுன்ற ஒரு காரணத்துக்காக அடுத்த நிமிஷமே அப்பா, அம்மாவை மறக்க முடியாது, என் குடும்பம், என் வீடுன்ற எண்ணமெல்லாம் வர கொஞ்ச நாட்களாவது தேவை படும், உங்களை பெற்றவர்கள் மட்டும் தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்து , வளர்த்து உங்களை ஆளாக்கினார்களா ?  ஒரு பெண்ணை புரிந்து கொள்ள முடியாதவன் , அவளது ஆசைகளை ,உணர்வுகளை மதிக்க தெரியாதவன் எதற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் ?

இது சிறிய விசயமாக தெரியலாம் , தன் மனைவியை பற்றி , அவளது குடும்பத்தை பற்றி ஊருக்கே கேட்க்கும் படி பேசிகொண்டிருக்கிறாயே, பெண்களை பெற்றவர்கள் என்றால் கேவலமா?  

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்"

நீயும் இந்த சூழலை சந்திக்க வேண்டி வரலாம்.....................

Monday, April 19, 2010

கண்ணன் என் காதலன்

"மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" ன்னு தொடங்கற திருப்பாவை பற்றி எங்கள் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது தான் ஆண்டாள் பத்தியும் அவங்க கண்ணன் மேல வைச்சுருந்த அந்த காதலயும் உணரமுடிஞ்சது . அதுக்கு அப்புறமா திருப்பாவை பாடல்கள தேடி கண்டு பிடிச்சு (உபயம் திரு சுகுமாரன் அவர்கள்- எங்கள் குடும்ப நண்பரும் அரசு கலைகல்லூரி பேராசிரியர் )   அதுவும் திருமதி. எம் எல் வசந்தகுமாரி அவர்களின் குரலில் அந்த பாடல்கள கேட்கறதே ஒரு சுகம் .

"நெய்யுண்ணோம் பால் உன்னோம்னு " மார்கழி மாசத்துல விரதமிருந்து  , உடம்பு சரி இல்லாம போய் ,   "உன் உடம்புக்கு நெய்யும் பாலும் சாப்பிட்டே  தேற மாட்டேங்குது, .(!) இதுல விரதம் வேறயா" ன்னு  வாங்கி கட்டிகிட்டது  ஒரு தனி கதை .

 மார்கழி மாசத்துல ரேடியோல திருப்பாவை , திருவெம்பாவைல இருந்து தினம் ஒரு பாடல சொல்லி அதோட விளக்கத கேட்க்கும் போது கண்ணபிரான் மேலயும் ஒரு தீராத காதல் .   மார்கழி மாசத்துல டிடில குட்டி பத்மினி ஆண்டாளா  நடிச்சத பார்க்கும் போது  நான் என்னையே ஆண்டால நினச்ச காலம் எல்லாம் உண்டு, இப்படியா என்னோட கண்ணன், ஆண்டாள் காதல் தொடர்ந்தது,  இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லறேன்னா,    போன வருஷம் "கிருஷ்ணஜெயந்தி" க்கு எங்க வீட்டு குட்டி பசங்களுக்கு கிருஷ்ண, ராதா  மாதிரி மேக்- அப் போட்ட போட்டோவ பார்த்ததுக்கு அப்புறமா இத  எழுதணும்ன்னு  தோனுச்சு .

ரஞ்சித்தும் , தேஜாவும்
நாங்க எங்க அலுவலக வேலைய எல்லாம் முடிச்சுட்டு ராத்திரி 10 மணிக்கு இந்த போட்டோவ எடுக்கும் போது (கிருஷ்ண & ராதா) ரெண்டு பேருக்குமே தூக்கம் வந்துடுச்சு .அதனால சோகமா இருக்காங்க ,  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ஆண்டாள் போல தான் போடணும்னு நினைச்சோம் நேரம் இல்லாததால  ராதாவாயிடுச்சு (!).


Thursday, April 15, 2010

சிசேரியன்

முன்னெல்லாம் ஸ்வீட் கொடுத்து "குழந்தை பிறந்திருக்கு " ன்னு யாரவது சொன்னா பையனா? பொண்ணான்னு கேட்கறது வழக்கம் . ஆனா இப்ப நார்மலா, சிசேரியனா ன்னு கேட்கற அளவுக்கு சிசேரியன் ரேட் அதிகமாயிடுச்சு.

WHO (WORLD HEALTH ORGANISATION) னோட கணக்கு படி ஒரு நாட்டில சிசேரியன் ரேட் 15 % க்கு மேல இருக்க கூடாதுன்னு சொல்றாங்க . ஆனா சீனால இந்த விகிதம் 46 %, ஆசியா நாடுகள்ல 25 % ம் அதிகமாயிடுச்சு.

நார்மல டெலிவரிய விட 4 மடங்கு அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கு இந்த சிசரியன்ல. ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்ச சில மருத்துவர்களே கூடுதலா  20  ஆயிரம்  கிடைக்கறதுக்காக மனசாட்சியே இல்லாம சிசரியன பரிந்துரை செய்யறது தான் இதுல வேதனையான விஷயம், தலை திரும்பல , தண்ணி பத்தலைன்னு பல காரணங்கள். அதோட அவங்களுக்கும் பொறுமை இல்ல, சிசரியனா 30 to 45 நிமிட வேலை , முடிஞ்சுதா அடுத்த பேசன்ட்ட
பார்க்க போகலாம் , நார்மலனா எப்ப வலி வந்து , ............. எப்ப பிரசவம் பார்த்துன்னு அழுத்துக்கறாங்க..

சில இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே உபயோக படுத்த வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு சில பெண்களும் , சில மணி நேர வலிய தாங்க முடியாம , நேரமும், காலமும் சரியா இருக்கனும்கறதுக்காக தப்பா உபயோக படுத்தறாங்க .
(ஆடி மாசம் முதல் குழந்தை பிறக்க கூடாது, அமாவாசை ஆகாது, செவ்வா கிழமை பெண் குழந்தை ஆகாதுன்னு பல பல காரணங்கள் வேற ),.

சிசேரியன் மூலமா பிறக்கற குழந்தைகள் நார்மலா பிறக்கற குழந்தைகள விட கொஞ்சம் சூட்டிப்பு , புத்திசாலிதனதுல கொஞ்சம் கம்மியா இருப்பாங்கன்னு ஒரு ஆய்வுல சொல்றாங்க .

நம்ம பாட்டி , அம்மா காலத்துல எல்லாம் அரை டஜன் , ஒரு டஜன்னு வீட்ல தான்
பிரசவம் பார்த்தாங்க , ஆனா இப்ப ஒரு குழந்தை பெத்துகறதுக்குள்ள  அப்ப்பபான்னு
ஆயிடுது, நவீன உணவு முறைகளும், நவீன சாதனங்கள் வரவும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாம்,  அதோட ரிஸ்க் எடுக்க யாருக்கும் நேரம் இல்லாததும் ஒரு காரணம், 

இந்த நிலை மாறினால் சந்தோசம் தான்............ இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றும் சுகமே ....................

Friday, April 9, 2010

தேஜா

" மிச்சமான மூணு ரூபாயில ஐஸ் கிரீம் சாப்பிட்டேன்  ஆ................"

இந்த விளம்பரம் தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும், இப்போ
" மிச்சமான மூணு ரூபாயில கருவாடு சாப்பிட்டேன் ஏய் சீ நாத்தம்"
"மிச்சமான மூணு ரூபாயில மிளகா சாப்பிட்டேன் ஐயோ காரம்"
இப்படியா தொடருது ........................


-------------------------------------------------------------------------------------------------------
இந்த வாரம் தேஜா பாட்டி (என் மாமியார்) வீட்டில் டேரா போட்டிருக்கிறாள்.
நேத்து வீட்ல இருந்த "ரோசி" நாய் வாள பிடுச்சு இழுதுட்டா. சாதாரண நாட்டு நாய் தான் ஆனா அது எதுவும் செய்யாது . இவ சொல்றது எல்லாம் கேட்கும் . இவளுக்கும் ரோசி மேல ரொம்ப பிரியம் , (இருக்காதா  பின்ன, சாப்பாடு ஊட்டும் போது அம்மா எனக்கு ஒரு வாய் ரோசிக்கு ஒரு வாய் , ரோசி பாவம்னு சொல்லி பாதி சாப்பாட்ட ரோசி தலையில ! (இல்ல வாயில)  கட்டி விட்டுடுவா.)

வாள பிடுச்சு இழுத்ததுக்கு எங்க மாமியார் கொஞ்சம் பயத்துடன் அதிகமாகவே
திட்டிடாங்க . மேடம் ஒரே அழுகை ......... அழுதுகிட்டே "இருங்க இருங்க உங்கள என் அம்மாயி (எனது அம்மா) கிட்ட சொல்லி தரேன் என்று சொன்னது மட்டும் இல்லாம , எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தர சொல்லி பிடிவாதம் பிடிக்கவும் சரி எனன தான் சொல்றான்னு பார்க்க போன் பண்ணி தந்தேன் ,

 எங்க அம்மா கிட்ட "இந்த பாட்டி எனன திட்டிகிட்டே இருக்காங்க, நீ அவங்கள திட்டுன்னு சொல்லிட்டு , அடுத்த செகண்டே எங்க மாமியார் கிட்ட போன் கொடுத்து எங்க அம்மாயி உங்கள திட்டறாங்க நீங்களே வாங்கிகொங்கன்னு சொல்றா"

எங்க அம்மாவுக்கும் எதுவும் புரியல . எங்களுக்கும் தான்  நானும், எங்க மாமியாரும் சேர்ந்து திரு திரு திரு ன்னு முழிக்க வேண்டியது ஆயிற்று, :) (உன்ன இப்படி எல்லாம் பேச சொல்லி யாருடா சொல்லி தர்றா.................
------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, April 1, 2010

இன்று நீ நாளை நான்

சென்ற வாரம் "இன்று நான் நாளை நீ" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி ஒன்றை தயாரித்தோம். அதில் முதியோர் இல்லங்களில் இருக்கும் பெரியர்வர்களின் ஆசைகளையும் , அவர்களின் மனதில் இருப்பதையும் ரொம்பவே தெளிவாக சொன்னார்கள். அதில் ஒரு தாத்தா சொன்னார் 'வீட்டில் இருப்பதை விட இங்கே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று,  அத்துடன் அங்கு இருந்த ஒரு பாட்டி நிறைய புத்தகங்களை படிப்பவர் போலும், நிறைய தத்துவ வார்த்தைகளையும் உபயோகித்தார்,  அவருக்கு அவரது பேர குழந்தைகளை கொஞ்ச கொஞ்சமும் விருப்பம் இல்லை எனவும் வெறுப்புடன் தெரிவித்தார் , அத்துடன் "நான் எப்பவும் புத்தகங்களை தான் படிக்க வேண்டுமா , ஆசை, பாசம் எப்படின்னு தெரிஞ்சுக்க வேணாமா" என்றும் சொல்லி இருந்தார், தனது மகனின் வாரிசுகளை இந்த பாட்டி கொஞ்ச அனுமதி மறுக்க பட்ட வேதனையில் இருந்தார் பாவம்

அந்த  சமயத்தில் என் தோழி ஒருவர் நீண்ட நாட்களுக்கு முன் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது . அவளுக்கு திருமணம் முடிந்து, அவளுக்கும் அவளது கணவருக்கும் சரியான புரிதல் ஏற்படுவதற்கு முன்னே குழந்தையும் உண்டானது . அந்த சமயத்திலும் அவளுக்கும் அவள் மாமியாருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது, அதனால் அவளுக்கும் அவளது கணவருக்கும் ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அவளது மாமியாரே காரணம் எனவும் . தன கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கிறார் என்றும்  எண்ணினாள்அவள் 6  மாத கர்ப்பிணியாய் இருந்த சமயத்தில் அவளது மாமியார் வீட்டை விட்டு(அவளது கணவரையும் சேர்த்தே)  துரத்தி விட்டார்,  கணவனோ அம்மா பிள்ளையாக இருந்தார்,  இருவரையுமே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர், அப்போதே அந்த பெண் சொல்லுவாள் "என் குழந்தையை என் மாமியாரிடம் தர மாட்டேன்" என்று , குழந்தை பிறந்த பின் மாமியார் , வீட்டிற்கு அழைத்த போது அவரிடம் குழந்தையை தர மறுத்து விட்டாள்.அப்பொழுது அவள் சொன்ன வார்த்தை  " என்னையும் என் கணவரையும் பிரித்தது போல தன்னையும் தன் குழந்தையையும் பிரித்து விடுவார்கள்" என்று

அதே போல இன்னொரு பெண்ணின் மாமியாரோ,  "உனது சமபளதிற்க்காக தான் என் பையனுக்கு உன்னை திருமணம் செய்து கொடுத்தேன், அத்துடன் எங்களுக்கு இருக்கும் கடன்களை நீ அடைத்த பின் குழந்தை பெற்று கொள்" என்றும்  கூறினார்களாம் , இந்த மாதிரி மாமியார்கள் வயதான பின் அந்த மருமகள்கள் எப்படி கவனிக்க போகிறார்கள் ,

இதில் யாரை குறை சொல்வது? மருமகளின் மனச பத்தி கொஞ்ச கூட யோசிக்காமல் பல கஷ்டங்கள கொடுக்கிற மாமியார கவனிக்கலைன்னு எப்படி சொல்ல முடியும், ஆனா அதே சமயத்துல நல்ல மாமியார் மாமனார் இருந்தும் அவங்கள தங்களோட வெச்சுக்க பிரிய படாத எத்தனையோ மருமகள்களும் உண்டு,

அதுவும் மாமியார் மாமனார் என்று இருவரும் இருக்கும் போது கூட அவர்களுக்கு எதுவும் பெரிய  பிரச்சனையாக தெரியாது, யாரவது ஒருத்தர் மட்டும் இருந்து தனிமைய உணரும் போது தான்...................