Sunday, February 27, 2011

சும்ம்மம்மா



பதிவெழுத  வந்து 1 வருடம் ஆகிறது. எழுத நிறைய இருந்தாலும் நேரம் இல்லை என்ற ஒன்றை சொல்லியே நிறைய தவற விடவேண்டியதாகிறது. இனி மேல் குறைந்தது மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். (பாப்போம்!)

சென்ற வாரத்தில் நிறைய அலுவலக வேலைகள் இருந்த காரணத்தால் வாங்கிய மளிகை சாமான்களை கூட எடுத்து வைக்க முடியவில்லை. தேஜாவும் எதாவது விளையாடலாம் என்று நச்சரித்து கொண்டிருந்தாள். அவளுக்கும் நேரம் போகணும் , எனக்கும் வேலை ஆகணுமே , ஒரு ஒரு சாமான்களையும் பிரித்து போட ஒரு ஸ்பூனும், ஜாரும் கொடுத்து விட்டேன், அவளும் ஒரு துளி கூட சிந்தாமல் கவனமாக செய்து விட்டாள், இதுவும் மனதை ஒருமுக படுத்தும் செயல்தான், சிந்த கூடாது என்பதற்காகவே பொறுமையுடன் 30  நிமிடம் செய்தாள்.  பொருட்களின் பெயரையும் தெரிந்து கொள்ளவும்  என் வேலை சுலபமாக முடியவும் உதவிற்று.