Wednesday, May 26, 2010

ஸ்கூல்-2 தொடர்ச்சி

அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்பதை இந்த ஆண்டு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நன்றாகவே தெரிய வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், இல்லை தனியார் பள்ளிகளை ஓரம் கட்டும் வகையில் அரசு பள்ளி மாணவி சாதித்து இருப்பது பெருமைக்குரிய விஷயம். அந்த மாணவியும் தமிழ் வழிகல்வி படித்தவரே. இந்த மாணவியின் சாதனையை தொடர்ந்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பவர்கள் எண்ணிக்கை இனி உயரலாம். ஆனால் ஆங்கில வழி கல்வி முறையில் உள்ள அரசு பள்ளிகள் மிக குறைந்த அளவே உள்ளது. அதுவும் 6  ம் வகுப்புக்கு மேல் தான்.    (ஆங்கில வழி கல்வியை நான் என்றும் ஆதரிப்பது இல்லை)

"traveller " அவர்கள் என்னிடம் பேசும் போது, நீங்களும் ஏன் உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் விடக்கூடாது என்று கேட்டார்?    விடலாமே . கிட்டத்தட்ட நான் படித்ததும் அப்போதைய அரசு பள்ளிகளின் தரத்தை விட கொஞ்சம் அதிகமாக உள்ள பள்ளியில்தான்.

ஆங்கில வழியில் பயின்றவர்களை  விட தமிழ் வழியில் பயின்றவர்கள் தமிழையும், ஏன் ஆங்கிலத்தயும் கூட தவறில்லாமல் எழுதுவார்கள்  என்பதில் கொஞ்சம் கூட மாற்று கருத்து இல்லை, அதாவது ஒரு சில வார்த்தைகளில் "a " யும்  "e " யும் வருவது குழப்பத்தை தரும்,  ஆனால் தமிழ் வழி கற்றவர்கள் "எந்த இடத்தில "a " எந்த இடத்தில "e " என்பதை மிக சரியாகவே உபயோகிக்கலாம் , இன்னும் சொல்ல போனால் "center " என்ற இந்த வார்த்தைக்கும் "centre " என்ற இந்த வார்த்தைக்கும் கூட ஆங்கில மீடியத்தில் படித்தவர்களை காட்டிலும் தமிழ் வழி கற்றவர்களினால் சரியாக பிரித்து அறிய முடியும் .  அதோடு, எங்கும் கணினி மயமாகி போன இந்த கால கட்டத்தில் கண்ணினியில் திடீரென்று வரும் box ஐ படித்து புரியாமல் எல்லாவற்றுக்கும் "ஓகே" கொடுக்காமல் , சரியான தெரிவை செலக்ட் வேண்டுமானால் செய்யலாம் .

என் மகள்  தேஜாவை தமிழ் வழிக்கல்வியில் சேர்த்துவதில்  எனக்கு ஒன்றும் ஆட்சேபணை      இல்லை.   ஆனால் , வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்கள் அவளுக்கு தெரியாம போயிட்டா (!).     பலரும் இருக்கும் இடத்தில சத்தமாக பேசி சிரித்து, மற்றவர்கள்  கவனத்தை திசை திருப்ப தெரியாமல் போகுமோ,  காக்கா பிடிக்க, ஐஸ் வைக்க தெரியாமல் போகுமோ,     எவ்வளவு தான் knowledge  இருந்தாலும் நுனி நாக்கு ஆங்கியம் பேசுபவர்களை கண்டால் அலர்ஜி ஆகி "YES ", "NO " , "THANK U" வை தவிர வேற எதுவும் பேச முடியாமல் , தன்னம்பிக்கை "ஓட"  தனிமை படுத்தபடுவாளோ !.     இப்ப தேஜாவ ஓரளவு பிரபலமான அந்த மூன்றெழுத்து பள்ளியில சேர்த்த போதிலும்,  ஏன் நீங்க இந்த பள்ளியிலையில சேர்த்தியிருக்க கூடாதுன்னு சிலர் கேட்கிற சமயத்துல , ஒரு சமயம் govt ஸ்கூல்ல சேர்த்ததுக்கு அப்புறமா ,    "அட govt ஸ்கூல்லா ன்னு கேவலமா  கேட்டுட்டா , பாவம் தேஜா எனன ஆவாளோ?      Govt  ஸ்கூல்ல படிக்கறவங்க கிட்டத்தட்ட நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவங்களா தான் இருப்பாங்க, அப்படிப்பட்ட சூழ்நிலையில சமூகத்துல மேல் தட்டு வர்க்கத்தை போல அதிகாரத்தோட நடக்க தெரியாம போயிட்டா?    அத விட அவளுக்கு பிற்காலத்துல யார்கிட்டயாவது எதுக்க்காகவாவது கோபம் வந்து ஆங்கிலத்துல "shit " ன்னு ஒரு வார்த்தைய உபயோக படுத்த தெரியாம "உனக்கு ஒரு ம------ம் தெரியலன்னு தப்பான வார்த்தைய உபயோக படுத்தி , அவளுக்கு கெட்ட பெயர் வந்துட்டா?     இப்படி இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் .  

 வேற சோப்பு போட்டு குளித்தாலே தன் பெண்ணிற்கு தன்னம்பிக்கை போயிடும்னு கவலைபடற அம்மாக்கள் இருக்கற இந்த கால கட்டத்தில நான் எப்படி இதை எல்லாம் எதிர் கொள்வது?

அதோட தனியார் பள்ளிகளுக்கு தான் "exposure " நிறைய இருக்கு,   உதாரணத்துக்கு சொல்லனும்னா ஸ்கூல் activities ன்னு   வந்தா, ஊர்லயே பிரபலமாக இருக்கற பள்ளிகளதான தேர்ந்து எடுக்கறாங்க , (யாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது,) Govt ஸ்கூல்ல   இருக்கறவங்களுக்கு பல விஷயங்கள், பல போட்டிகள் நடக்கறது தெரியாமலே போயிடுது. (அறிவியல் கண்காட்சி உட்பட).    ஆனா தனியார் ஆங்கில பள்ளிகளில் , நம்ம கிட்டயே காச வாங்கி , அவங்க ஸ்கூல் பஸ்லயே கூட்டிட்டு போயிடறாங்க ,   ஓஓ! ஊர்ல இப்படி எல்லாம் நடக்குதான்னு Govt ஸ்கூல் குழந்தைகள் ஆச்சர்யபட்டு கொஞ்சம் ஒதுங்கிதான் போவாங்க ,

ஏன், அரசு பள்ளிகள்ல படிச்சு அப்துல்கலாம் அய்யா, அண்ணாதுரை போன்றவர்கள் முன்னேரலயானு   கேட்கலாம்,  சரி அவங்கள முன் உதாரணமா எடுத்துட்டு , நாளைக்கே அவள govt ஸ்கூல்ல  சேர்த்து விட்டுட்டு ஒரு சமயம் அவ govt ஸ்கூல்லயே  படிச்சு பெரிய ஆளா வந்துட்டா பரவாயில்ல,   எதோ ஒரு காரணத்துனால அது "reverse " ஆயிட்டா?  நீங்க தான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருகீங்க,  என்னையும் ஏன் கஷ்ட்ட படுத்தறீங்க? ன்னு கேட்டா எனன நான் சொல்லுவேன்?

ஆங்கில வழி கல்வி கற்றால் மட்டும் பிற்காலத்துல கஷ்ட படமாட்டாளான்னு கேட்டா , பணம் புழங்குகிற பள்ளியில கொஞ்சம் நல்ல " status " ல   அவ வளர்றதால பிழைக்க அதாவது சம்பாரிக்க  தெரிஞ்சுக்குவா, 

"சமூக அக்கறையோடு பிழைக்க தெரியாத நல்ல மனிதனாய் இருப்பதை காட்டிலும் , எந்த வித சூழ்நிலையும் கையாள கூடிய சாமர்த்தியம் உள்ளவளாய் வளர்ந்தால் போதும்."

அதை ஆங்கில வழி கல்வி தரும் என்று நம்புகிறேன். "நம்பிக்கை தானே வாழ்க்கை"

Tuesday, May 18, 2010

ஸ்கூல்- 2

ஸ்கூல்

summer vacation  முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 10 , 15 நாட்களே உள்ள நிலையில், இன்னும் கல்வி கட்டணம் அறிவிக்க படாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. அரசு அறிவித்துள்ள கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளில் சில , பள்ளியை மூடுவதாகவும் , இன்னும் சில பள்ளிகள் வழக்கம் போல செயல்படும், ஆனால் கல்வி கட்டணம் மட்டும் தற்போதைக்கு வசூலிப்பது இல்லை எனவும் அறிவித்துள்ளது இன்னும் சில பள்ளிகளில் வசூல் வேட்டையும் முடிவடைந்தது . இந்த நிலையில் அரசு அறிவித்த கட்டணத்தை கட்டாயம் ஏற்க வேண்டும் எனும் பட்சத்தில்  அதிகப்படியான கட்டணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்குமா பள்ளி நிர்வாகம்?

இதனை நாட்களாக ஏகத்துக்கும் , pre -kg க்கு கூட குறைந்த பட்சம் Rs . 15000 / - வசூலித்து பழகியவர்களிடம் , 3 இல் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க சொன்னால் இதை எப்படி ஏற்பார்கள். இதில் ஆசிரியர்களுக்கு தான் முதல் இழப்பு, இந்த வருடம் அவர்களின் ஊதியம் உயராது , இதனால் சில ஆசிரியர்கள் தவிர்த்து , பல ஆசிரியர்களும் தங்கள் ஊதியத்தை உயர்த்தி கொள்ள tuition  நடத்தியே தீர்வார்கள். இதை தனியார் பள்ளிகளும் கண்டும் காணாமலும் விட்டு விடுவார்கள். இதனால் மனரீதியாக பாதிக்க படுபவர்கள் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தான் ,

இதனை நாட்களும் கல்வி வியாபாரம் ஆக்கபடுவதை அரசு கண்டும் காணாமலும் விட்டு விட்டது ஏனோ ? எப்ப கல்வித்துறை தனியார் வசம் விடப்பதோ , அன்றிலிருந்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து இருக்க வேண்டும் , ஆனாலும் இந்த நிலையை இன்னும் வளர விடாமல், இப்பவாவது கல்விபுரட்சி , கல்வி கட்டண புரட்சி ஏற்ப்பட்டது நலமே .

கல்வியை சேவையாக நினைத்து பணிபுரிய எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் திரு.கல்யாணி அவர்களை போல ஒரு சிலரை பார்க்க முடிகிறது , மற்றபடி கல்வித்துறை நல்லா லாபம் அளிக்க கூடிய ஒரு தொழிலாகவே இருக்கிறது, பல புதிய வரவுகளான இன்டர்நேஷனல் pre -schools வெப்சைட் ல கூட franchisee option ஐ படித்தால் தெரியும், ஒரு pre -ஸ்கூல் ஆரம்பிக்க 5 முதல் 10 லட்சங்கள் வரை தேவை படும் . இதை ஒரே வருடத்தில் நீங்கள் பெற்றிடலாம் என்று இருக்கிறதை பார்க்கும் போது இது ஒரு நல்லா businees தானே.

இங்கு எங்கள் கோவையில் , foundries  வைத்திருந்த பல தொழில் அதிபர்களும் தற்போது இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கும் இந்த  கட்டண விகிதம் பொருந்துமா என்பதும்  தெரியவில்லை. உலகமயமாக்களில் corporate கலாச்சாரத்தில் கோவையில்  மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் வந்துவிட்டது. பல ஆயிரங்கள் வசூலிக்கபடும்  இந்த பள்ளிகள் எல்லாம் பெயர் அளவிற்கு தான் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் , பாடத்திட்டம் என்னவோ C B S E தான் ,  இதற்கும் அங்கீகாரம் கொடுத்து வளர்த்து வருகிறோம் ,

ஒரு புறம் சமச்சீர் கல்வி, பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருக்க மாறுபட்ட இந்த கல்வி திட்டத்துக்கு என்று வரும் விடிவு காலம்?  இதற்க்கு தீர்வு தான் எனன???????????

Tuesday, May 11, 2010

சமையல்

ரொம்ப நாட்களாக receipe  எதாவது போடலாம்னு ஆசை . சரி தேஜாவுக்கு பிடிச்ச பன்னிர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 50  கிராம்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250  கிராம்
முந்திரி - 50 கிராம்
கசகசா - 10 கிராம்
தயிர் - 50 கிராம்
டால்டா - 50 கிராம்
ஏலக்காய் - 4
பட்டை ,கிராம்பு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகதூள் - சிறிதளவு
மல்லித்தூள் - 1 /2  டீஸ்பூன்
பன்னிர் - 500 கிராம்
வெண்ணை - 5 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப



முதல்ல வாணலியில எண்ணெய் சூடானதும் வெங்காயத போட்டு நல்லா வதக்கி நைசா அரச்சுக்கணும். தக்காளிய தனியா வேக வெச்சு  அரைத்து வைக்கணும் . முந்தியையும், கசகசாவையும் தண்ணீரில் ஊற வெச்சு தயிர் சேர்த்து அரைக்கணும் .

இப்போ ஒரு வாணலியில டால்டா, கொஞ்சம் எண்ணெய் ஊத்தி ஏலக்காய், கிராம்பு , பட்டை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கணும், அடுத்ததா வேக வெச்சு அரச்ச தக்காளி போட்டு வதக்கிட்டு , அரச்ச  வெங்காயத்த   சேர்க்கணும் . கொஞ்சமா வதக்கினதுக்கு அப்புறமா மஞ்சத்தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வாடை போறவரை கிளறனும் . அப்புறமா அரச்சு வெச்சு இருக்கற முந்திரி, உப்பு , பன்னிர் சேர்த்து (பன்னிர எண்ணையில வறுத்து எடுத்துட்டா நல்லா இருக்கும்)  வெண்ணை ஊற்றி ஒரு கொதிக்க  விடவும்,  ம்ம்ம் ....... வாசம் வருதா .........
சப்பாத்தியோட தொட்டு சாப்பிட அருமையான டிஷ் .

Sunday, May 9, 2010

குட்டீஸ்

பள்ளிக்கூடம் ஆரம்பித்து 10 நாட்களுக்கு மேலாக ஆனாலும் ரஞ்சித்க்கு இன்னும் இந்த பள்ளி பொருந்தவில்லை.  தேஜா "A " section , ரஞ்சித் "B " இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சென்ற வாரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களும் ரஞ்சித்தை யாரோ அடித்துவிட்டார்களாம். வீட்டில் வந்து கம்ப்ளைன்ட். என்னவென்று விசாரிப்பதற்காக என் அம்மா சென்றிருந்தார், கூடவே தேஜாவும்(!).    ரஞ்சித்தின் பக்கத்தில் இருந்த பையனிடம் "உன் பெயர் எனன?" என்று மட்டும் தான் கேட்டிருக்கிறார்,  அந்த பையன் பதில் சொல்வதற்குள் "எங்க ரஞ்சித நீ அடிச்சயா, இனிமேல் அடிக்காத , என்ன "  என்று சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மிரட்டி இருக்கிறாளாம் தேஜா. நல்லவேளையாக அந்த பையன் அழவில்லை ,  "வீட்ல புலி, வெளியில எலி" யாய் இருந்தவள்,  திடீர்ன்னு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்ததுன்னு தெரியல....
---------------------------------------------------------------------------------------------
பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் காலையில் 7 மணிக்கே குளித்து தேஜா ரெடி ஆயிடுவா. சனிக்கிழமை விடுமுறை ஆனதால் மெதுவாதான் எழுந்தாள்.  எழுந்ததும் டிவி பார்த்துட்டே இருந்தாள் (ரஞ்சித்தும் தான்). நமக்கும் ஒரு வேளை முடிஞ்சா மாதிரி இருக்குமேன்னு,
"தேஜா, வா குளிக்கலாம்" - நான்
"dailyum  தான் நேரத்துல குளிக்கறேன்ல, இன்னைக்கு அப்புறமா குளிச்சுக்கறேன்" - தேஜா சொல்லவும்,  
நமக்கும் ஒரு வேலை முடிஞ்ச மாதிரி இருக்குமேன்னு, நானும் கொஞ்சம் குரலை உயர்த்தி
"உன் இஷ்டதுக்கு என்னால குளிக்க வைக்க  முடியாது, வா வந்து குளி "
கொஞ்ச நேரம் அமைதியா  இருந்தா,  ரஞ்சத் கிட்ட எதோ சொன்னா, அந்த சமயத்துல எங்க அம்மா வந்து "விடு அப்புறமா நானே குளிக்க வைச்சுக்கிறேன், மழை தூரலா இருக்குல"ன்னு சொல்லவும், சரின்னு நான் குளிக்க போயிட்டேன்,

அப்ப ரஞ்சித் சொன்னான் " தேஜாக்கா, என்னை பார்த்து  உங்க அம்மா பயந்து போய் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கிட்டங்க,  வா நாம டிவி பார்க்கலாம்," - டொயிங்(!) 
(இப்படி அடிக்கடி பல்பு வாங்கறதே வேலையா போச்சு)
-------------------------------------------------------------------------------------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடுவதற்காக கட்டிலுக்கு  அடியில் வைத்திருந்தேன். தேஜாவும் , ரஞ்சித்தும் விளையாடிட்டு இருந்தவர்கள், கட்டிலுக்கு அடியில் இருந்த தண்ணீரை ரஞ்சித் கொட்டி விட,  நல்ல வேலையாக யார்மேலயும் படாமல் கீழ கொட்டிடுச்சு. ஆனாலும் பதட்டத்துடன் " இவ்வளவு இடம் இருக்க கட்டிலுக்கு அடியில இருந்த தண்ணிய கொட்டிடியே , சுடு தண்ணி கால்ல பட்டா எனன ஆகி இருக்கும்ன்னு" -  சத்தம் போட சார் அழுகையுடன் கோபமாக வெளிநடப்பு செய்து விட்டார் .

தேஜாவுக்கு வந்ததே கோபம் " நீ ஏன் என் friend - எ திட்டினே , பார் அவன் அழுதுட்டே போறான் பார், தண்ணிய நீ ஏன் கீழ வெச்ச??? " - :((((
வாஸ்தவமான பேச்சு தான ன்னு நான் யோசிக்கும் போதே வந்தார் சார் (ரஞ்சித்)

" நீங்க ஏன் அக்காவோட frienda  திட்டினீங்க . அக்கா அழறா பாருங்க " (ங்கே )

"யாருடா அக்கா friend "?? -

"நான் தான் (!) "-         - ரஞ்சித் சொல்ல டொயிங்!

- -எப்படி  எல்லாம் யோசிக்கறாங்கப்பா !
----------------------------------------------------------------------------------

சென்ற வாரம் கொடைக்காணல் செல்வதற்கு முன்பாக என் நாத்தனாரின் வீட்டிற்கு சென்றிருந்தோம்,  அங்கு பக்கத்தில் இருந்த கிரௌண்ட் -இல்  குழந்தைகளுக்கு ஓட்ட பந்தயம் வைத்து விளையாடி கொண்டிருந்தோம். அப்போது ஒரு 8 வயது பெண் எங்கள் அருகில் வந்து நின்றாள். நானும் விளையாட்டு மும்மரத்தில் சரியாக கவனிக்க வில்லை .  தேஜா அந்த பெண்ணிடம் எதோ பேசி கொண்டிருப்பது தெரிய என் கவனம் தேஜா மீது சென்றது ,

"நீயும் எங்க கூட விளையாட வறியக்கா"

"ஆமாம்" -
"உங்க வீட்ல அம்மா தேட மாட்டாங்களா"
"இல்ல தேட மாட்டங்க"
சரி இருன்னு சொல்லிட்டே "அம்மா இந்த அக்காவையும் நாம விளையாட்டுல சேத்திக்கலாமா"  - தேஜா கேட்கவும்
சரி ன்னு சொன்ன நான் என்னை நினைச்சு நானே ஒரு நிமிஷம் வெட்க பட்டேன் . அதே  சமயம் பெருந்தன்மையா  யோசிக்கறாலேன்னு பெருமையா இருந்தது .
அப்ப என் நாத்தனாரின் பெண் "இது ஒரு குட்டி அபி" ன்னு  (அபியும் நானும் படத்துல வர மாதிரின்னு)  சொல்ல எனக்கு ரொம்பவுமே சந்தோசமா இருந்தது ,

"அடுத்தவர் உணர்வுகள் நீ புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாய் ,
கண்ணே!  நீ வளருகிறாய் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் வெளிகாட்டுகிறாய்"