Friday, July 16, 2010

குட்டீஸ்

கதைகளை கேட்பதோடு மட்டும் அல்லாமல் கதாபாத்திரமாக மாறிவிடுவது எங்கள் வீட்டில் ரொம்ப பிரபலம். அதாவது,  பாட்டி வடை சுட்ட கதையில், நான் தான் பாட்டி, நான் வடை சுட, தேஜா காக்கா போன்று வடையை திருடி சென்று விடுவாளாம். கட்டிலின் மேலே சென்று உக்கார்ந்து விடுவாள். பின்பு நானே நரியாக மாறி சரியாக டயலாக்  சொல்ல வேண்டும், அவ இஷ்ட பட்டா வடைய கீழ போடுவா, இல்லன்னா ஏமாந்த நரியாக திரும்பி வர வேண்டும்,  இது மாதிரி நாங்க படிக்கற ஒவ்வொரு கதைகளிலும் ஏமார்ந்த கதா பாத்திரம் என்னுடையது.

அந்த வரிசையில, கண்ணன் வெண்ணைய திருடி சாப்பிட்ட கதை தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு போர் அடிச்சா, இந்த நாடகத்த தான் முதல்ல விளையாடனும்னு சொல்லுவா. போனா வாரம் ஒரு நாள்,
  "அம்மா, நீ தான் கண்ணா மம்மியாம் , நீ வெண்ணைய கடைஞ்சு மேல வை" ன்னு சொல்லிட்டே இருந்தா.
நான் ஏதோ அசதியில இருந்ததால "நான் கண்ணா மம்மி எல்லாம் இல்ல, தேஜா மம்மி தான்" ன்னு சொல்ல, ஒரு குச்சி எடுத்துட்டு வந்து "மந்திரம் சொல்ற சுதி (or
சுஜி) சொல்றேன், தேஜா அம்மாவை, கண்ணா அம்மாவா  மாத்துன்னு" சட்டுன்னு சொல்லவும், (உபயம்: சுட்டி டிவி, எனன தொடர்ல இப்படி வரும்னு தெரியல)  அதுக்கு அப்புறமா விளையாடாம இருக்க முடியுமா!

(கதைகள சொல்றத காட்டிலும், நடிச்சு காமிக்கறதால creativity  வளர  கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, ஒரு டயலாக் இப்படிதான் சொல்லனும்னு இல்லாம, அந்த நிமிஷத்துல அவங்களுக்கு தோன்றத சொல்லும் போதும், இந்த கதைய இப்படி மாத்திக்க்கலாமான்னு குழந்தைகளே கேட்க்கும் போதும் நமக்கு அது புரியும், (ஆனா பல சந்தர்ப்பங்கள்ல நம்ம மூக்க உடச்சுடுவாங்க, கவனமா இருக்கணும்!)

Wednesday, July 7, 2010

காதல், கல்யாணம்

காதலுக்கும், கல்யாணதிற்க்கும்  எனன வித்தியாசம்ன்னு ஒருத்தர் ஒரு முற்றும் துறந்த முனிவரிடம் கேட்டானாம்,  அந்த முனிவர் எந்த பதிலும் சொல்லாமல், ஒரு பெரிய தோட்டத்திற்கு அவரை அழைத்து சென்று "இது ஒரு ரோஜா தோட்டம், இந்த தோட்டத்துல போய் இருக்கறதுலயே பெரிய செடியா பறித்து வா, ஆனால் இரண்டு நிபந்தனை. ஒரே ஒரு செடி மட்டும் தான் பறிக்கணும், ரெண்டாவதா,  நீ போன வழியிலேயே திரும்பி வரகூடாது ன்னு சொன்னாராம். சரின்னு அவரும் போயிட்டு கொஞ்ச நேரம் கழித்து வெறும் கையோட முனிவர் கிட்ட வந்தாராம். முனிவர்  கேட்டார், "ஏனப்பா, வெறும் கையோடு  வருகிறாய்? அங்கு பெரிய செடிகளே இல்லையா?".   அதற்க்கு அவர் "நிறையவே இருந்தது, ஒரு செடிய பார்த்துட்டு, அடுத்ததா இருக்குற செடிய பார்க்கும் போது அது தான் ரொம்ப பெருசா தெரிந்தது , அப்படியே போனா அதற்க்கு அப்புறமா வர்ற செடிகள் எல்லாம் சின்னதா இருந்தது, போன வழியிலே திரும்ப வரகூடாதுன்ற நிபந்தனைனால வெறுங்கையோடு வர வேண்டியதா போச்சுன்னாராம்"

சரி பரவாயில்ல, இப்ப அடுத்ததா ஒரு சூர்யகாந்தி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனாராம். இதுல இருக்கறதுலயே ரொம்ப அழகான சூர்யகாந்திய பறிச்சிட்டு வா, இதற்கும் அதே நிபந்தனை தான்னு சொன்னாராம். தோட்டத்துக்குள்ள போன அவர் சட்டுன்னு சீக்கிரமா ஒரு சூர்யகாந்தி பூவோட வந்துட்டாராம். அந்த முனிவர்  "ஏனப்பா போன உடனே வந்துட்ட, இருக்கற பூவிலயே இந்த பூதான் ரொம்ப அழகா இருந்ததான்னு கேட்டாராம்"   "இல்லங்க, நான் முதல்ல பார்த்த அழகான பூ இதுதான், இத பறிச்சதுக்கு  அப்புறமா வேற ஒரு பூவும் அழகா தெரிஞ்சது, ஆனா போன தடவை மாதிரி ஏமாற கூடாதுன்னு, இதையே பறிச்சுட்டு வந்துட்டேன்னு சொன்னாராம்"


முனிவர் சிரிச்சுட்டே இது தான் காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்ன்னு சொன்னாராம்.