Thursday, February 25, 2010

செல்ல குட்டி

தேஜாவுக்கு இப்பெல்லாம் அவங்க அப்பாவ வம்புக்கு இழுககறதே வேலையா போச்சு .
" இன்னைக்கு உங்க சோப்பு போட்டு தான் குளிக்க போறேன்" - இது தேஜா
"என்னோட சோப்பு தொடாத , நீ என் சோப்பு போட்டு குழிச்சா நான் உன்னோடத  எடுப்பேன்"  பக்கத்தில் இருந்த ரின் சோப்பை காட்டி "இந்தா இந்த சோப்பு போட்டு குளி" - தேஜா அப்பா
"நான் என்ன துணியா? "
என்ன சொல்றதுன்னு தெரியாம தேஜா அப்பா    :)! -
----------------------------------------------------------------------------------------------------------------------------

தேஜாவும் நானும் எதாவது படிக்கும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும தமிழ்ல அர்த்தம் சொல்லிவிடுவேன். திடீர்னு ஒரு முறை என்னிடம் என் பெயரை சொல்லி இது தமிழா இங்கிலிஷா என கேட்க்க , நானும் தமிழ் தான்னு
 சொல்ல அப்ப இங்கிலிஷ்ல உன் பேர் என்ன? இங்கிலீஷ் ளையும் என் பேரு இது தாண்டா,  " உனக்கு மட்டும் ஏன் ஒரே பேரு , உங்க அம்மா உனக்கு இங்கிலீஷ் ல பேர் வைக்க மறந்துட்தாங்களா "
திரு திரு .................. (அட நான் தாங்க)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தேஜா ஸ்கூல்ல நேத்து ஸ்போர்ட்ஸ் டே. அவளுக்கு " Ball Hunting" ல செகண்ட் Prize. மேடம்க்கு சந்தோசம் தாங்கல ,எல்லாரும் clap பண்ணினார் களாம். இது வரை அவளுக்கு Prize கிடைத்ததில்லை. கொஞ்ச நாள் முன்னாடி recitation competition ல அன்னை தெரசா மாதிரி டிரஸ் பண்ணிட்டு,(அன்னை தெரசா quotes சொல்லி தந்தேன் வீட்ல ரொம்ப கரெக்டா சொன்னா). ஆனா  அங்க எதுவும் சொல்லாம வந்துட்டா .என்னுடைய அண்ணா பையன் ரஞ்சித்தும் அதே class ல தன படிக்கிறான் அவன் கரெக்டா சொல்லி அவனுக்கு பரிசு கிடைத்தது, நாங்க எதுவும் compare பண்ணி பேசலைன்னாலும் தனக்கு பரிசு கிடைக்கலன்னு கொஞ்சம் feel  பண்ணினா. (இந்த வயசுலயே எப்படி எல்லாம் பீல் பண்றாங்கப்பா). இந்த முறை prize வாங்கிட்டா சந்தோசம் தான் .
------------------------------------------------------------------------------------------------------------------------------

தேஜாவுக்கு "செல்லகுட்டின்னு" கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும். அவ ஒரு முறை செய்த ஒரு தவறுக்காக அவளை திட்டிய போது என்னிடம் அழுது கொண்டே " பார் என் நெஞ்ச தொட்டு பார் எப்படி வேகமா துடிக்குது . நான் பயந்துட்டேன் எனன செல்லகுட்டின்னு சொல்லு " ன்னு சொல்லற அவள பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் , இப்படியெல்லாம் பேச சொல்லி யார்டா சொல்லிதரதுன்னு கேட்க்க தோணுது . அப்புறம் எங்க கோப படறது..................
செல்ல குட்டி இன்னும் வரும்.............
---------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, February 22, 2010

'ஹைடி'- ithu vilambaram alla

'ஹைடி'
இது விளம்பரம் அல்ல.
ஹைடி இது சுட்டி டிவிஇல் தினமும் காலை ஒளிபரப்ப படும் ஒரு தொடர், சுட்டி டிவி இல் வரும் ஒரு உருப்படியான நிகழ்ச்சி. ஹைடி மலையில் வசிக்கும் ஒரு சின்ன பெண். அங்க இருக்கற இயற்கையை ரசிச்சுகிட்டு, இயற்கையோட வாழறா. அதுல காமிக்கிற மலைகளும் அவங்க வாழ்க்கையையும் ரொம்ப அழகா இருக்கு, ஹைடி பட்டாம்பூச்சி கூடவும், ஆட்டு குட்டி கூடவும் பேசி விளையாடறத பார்க்கும் பொழுது  நமக்கே ஆசையா இருக்கு,இதுல கிராமத்து வாழ்க்கைக்கும், நகரத்து வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசமும் ரொம்பவே அழகா நமக்கு புரியும், உண்மையிலே குழந்தைகள் நாய், பூனை பார்த்து எல்லாம் பயப்பட மாட்டங்க, அதோட பேசுவாங்க , ரொம்ப அன்பா விளையாடுவாங்க, நாம தான் வளந்ததுக்கு அப்புறமா இதெல்லாம் ரசிக்க மறந்திடறோம் . அதுல காமிக்கற மாதிரி ஒரு கிராமமும் இப்ப இருக்குமான்னு தெரியல,  ஒவ்வொரு சீசன் னா கதை நகருது அதனால சீசன் பதியும் குழந்தைகளுக்கு நாம சுலபமா கத்து  கொடுக்க முடியுது, அது மட்டும் இல்லாம உயிர்களிடத்து அன்பு வேணும்ங்கறத உணர வைக்குது ,ஹைடி ஸ்கூல்க்கு போகணும்னு விருப்பப்படும் போது அவங்க தாத்தா  சொல்லுவாரு பள்ளிக்கூடம் கத்துதரத விட பல மடங்கு கிராமத்துல நீ கத்துக்கலாம்னு .  அது உண்மை தான . ஒரு செடி எப்படி வளர்துன்னு நாம புக் ல படத்த  பார்த்து தான தெரிசுகறோம் .அத மனப்பாடம் செஞ்சு தான மனசுல நிறுத்திகிறோம்.  அனுபவத்துல தெரியறது இல்ல .
                              இயந்திர தனமா இயங்கிட்டு இருக்கற நாம நல்ல பல விசயங்கள ரசிக்க மறந்திடறோம் எதுக்காக பணம் சம்பாதிக்கறோம், நாம எத நோக்கி போயிட்டு இருக்கோம் இதெல்லாம் நம்மக்கே தெரியாது இயற்க்கைய அழிச்சுட்டு செயற்கையான விசயங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கறோம் அதையே ரசிக்கவும் செய்யறோம் . நாமும் நம்ம குழந்தைகளுக்கு இயற்க்கைய ரசிக்க பழக்கலாமே .
இன்னும் வரும்

Thursday, February 18, 2010

ஸ்கூல்


தேஜா இப்போது நர்சரியில் படிக்கிறாள். கடந்த ஒரு வாரமாக ஹோம் வொர்க் கொடுக்கிறார்கள். முதலில் STANDING லைனில் ஆரம்பித்து E F I T இந்த மாதிரி எழுத்துக்களை எழுத பழக்க படுத்துகிறார்கள். முதல் இரண்டு நாட்கள் எழுத ரொம்ப ஆசை பட்டாள். இபோது அவளுக்கு எழுதவே விருப்பம் இல்லை. ஒரு வகையில் பார்த்தால் பாவமாக இருக்கு. ஆனால் இந்த ஹோம் வொர்க் குடுக்கறதுக்கு முன்னாடி அவளாகவே சுவற்றிலும், எந்த புக் கிடைச்சாலும் அதுலயும் ரொம்பவே கரெக்டா A, B, T,H E NNU சில எழுதுக்கள எழுதிட்டு இருந்தா. கண்டிப்பா HOMEWORK செய்யணும்ணு சொன்னா என்னைபார்த்து பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கறா . அவ சிரிப்ப பார்த்ததுக்கு அப்புறமா என்ன பண்றது.ஆனாலும் எப்படியோ தாஜா பண்ணி எழுத வைக்கறது தான் . நானெல்லாம் 5 வயசுல தான் எழுதவே ஆரம்பிச்சேன் . ஆனா இப்ப இருக்கற EDUCATION SYSTEM வேறமாதிரி இருக்கு, இங்க ஒரு SCHOOL ல PRE-KG (2 1/2 YRS) சேக்கறதுக்கு குழந்தைக்கு INTERVIEW. அந்த குழந்தை ALPHABET சொல்லனுமாம். உங்க அப்பா அம்மா எங்க வொர்க் பண்றாங்கன்னு கேட்டா சொல்ல தெரியணுமாம். அப்படிசொல்ல தெரியலன்னா ADMISSION கிடையாது என்னை கொடுமை இது, இந்த மாதிரியான ஸ்கூல நாம தேர்ந்தெடுக்க கூடாதுன்னு நினைச்சா சாதாரண MATRIC SCHOOLAYUM INTERVIEW IRUKKUNU சொல்லறாங்க .
தற்போது இருக்கும் பல நர்சரி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் மேலை நாட்டு முறையை பின்பற்றுவதாக சொல்லுகிறார்கள் . அவர்கள் எதோ MONTESSORI அம்மாவின் வாரிசுகளாக தங்களை நினைச்சுட்டு அவரது கல்வி முறைப்படி ஒரு கோடு கூட பிசகாமல் மாணவர்களை வழிநடத்துபவர்கள் மாதிரி தான் பேசுவாங்க. அதிலும் மிக பெரிய கொடுமை
MONTESSORI அம்மையார் சொன்னது என்னவோ தாய் மொழி கல்வி தான் சிறந்ததுன்னு , அவரோ இத்தாலியை சேர்ந்தவர் அவருக்கும் ஆங்கில வழி கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, ஆனா இங்க எல்லா ஸ்கூல் ஆங்கிலதேயே அடிப்படைய வெச்சு கற்று கொடுக்கும் சூழ்நிலை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே, அறிவு அல்ல என்பது பலருக்கு புரிவதில்லை .

இது புரிஞ்சாலும் வேற தமிழ் வழி கல்வி கர்பிக்கற ஸ்கூல் அருகில் இல்ல . அதனால வேற வழி தெரியாம நானும் இங்கிலீஷ் மீடியம் தேடி ஓட வேண்டி இருக்கு, இதுலயும் ஒவ்வொரு SCHOOLYUM ஒவ்வொரு மாதிரியான கல்வி திட்டம் MATRIC, CBSE ன்னு இதுல எத தேர்ந்தேடுக்கரதுன்னு ஒரே குழப்பம் . சமசீர் கல்வி திட்டம் வரதுக்கு முன்னாடியே பல ஸ்கூல்ம தங்களோட ஸ்கூல் ல CBSE க்கு மாதிடரங்க . இன்னும் ஸ்கூல்ல பத்தின பல விஷயங்கள் இருக்கு அடுத்த பதிவிலயும் இது தொடரும்.

டெஸ்ட் msg

நீண்ட நாள் யோசனைக்கு பின் எப்படியோ ப்ளாக் திறந்தாயிற்று.
சும்மா எதாவது எழுதலாம் என்று , முதலில் தேஜாவை பற்றி .............
நீ என் கருவறையில் இருந்த காலத்திலிருந்தே உன்னை பற்றிய சிந்தனை தான் என்மனதில்.
உன்னை அப்போதிருந்தே ரசிக்க ஆரம்பித்தேன். நீ என் வயிற்றில் சுற்றிவரும் ஒவ்வொரு முறையும் எனக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட்ட போதும் நீ அக்டிவ இருக்கரயினு சந்தோஷ படுவேன்,
எப்படியோ நீயும் பிறந்து மூன்று வருடங்கள் ஓடிடுச்சு . இன்னும் வர்ற பதிவுகள்ள நிறைய எழுதறேன். தேஜா பத்தி மட்டும் இல்லாம நிறைய ..................
இன்னும் வரும்