Sunday, May 9, 2010

குட்டீஸ்

பள்ளிக்கூடம் ஆரம்பித்து 10 நாட்களுக்கு மேலாக ஆனாலும் ரஞ்சித்க்கு இன்னும் இந்த பள்ளி பொருந்தவில்லை.  தேஜா "A " section , ரஞ்சித் "B " இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சென்ற வாரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களும் ரஞ்சித்தை யாரோ அடித்துவிட்டார்களாம். வீட்டில் வந்து கம்ப்ளைன்ட். என்னவென்று விசாரிப்பதற்காக என் அம்மா சென்றிருந்தார், கூடவே தேஜாவும்(!).    ரஞ்சித்தின் பக்கத்தில் இருந்த பையனிடம் "உன் பெயர் எனன?" என்று மட்டும் தான் கேட்டிருக்கிறார்,  அந்த பையன் பதில் சொல்வதற்குள் "எங்க ரஞ்சித நீ அடிச்சயா, இனிமேல் அடிக்காத , என்ன "  என்று சொர்ணாக்கா ரேஞ்சுக்கு மிரட்டி இருக்கிறாளாம் தேஜா. நல்லவேளையாக அந்த பையன் அழவில்லை ,  "வீட்ல புலி, வெளியில எலி" யாய் இருந்தவள்,  திடீர்ன்னு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்ததுன்னு தெரியல....
---------------------------------------------------------------------------------------------
பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் காலையில் 7 மணிக்கே குளித்து தேஜா ரெடி ஆயிடுவா. சனிக்கிழமை விடுமுறை ஆனதால் மெதுவாதான் எழுந்தாள்.  எழுந்ததும் டிவி பார்த்துட்டே இருந்தாள் (ரஞ்சித்தும் தான்). நமக்கும் ஒரு வேளை முடிஞ்சா மாதிரி இருக்குமேன்னு,
"தேஜா, வா குளிக்கலாம்" - நான்
"dailyum  தான் நேரத்துல குளிக்கறேன்ல, இன்னைக்கு அப்புறமா குளிச்சுக்கறேன்" - தேஜா சொல்லவும்,  
நமக்கும் ஒரு வேலை முடிஞ்ச மாதிரி இருக்குமேன்னு, நானும் கொஞ்சம் குரலை உயர்த்தி
"உன் இஷ்டதுக்கு என்னால குளிக்க வைக்க  முடியாது, வா வந்து குளி "
கொஞ்ச நேரம் அமைதியா  இருந்தா,  ரஞ்சத் கிட்ட எதோ சொன்னா, அந்த சமயத்துல எங்க அம்மா வந்து "விடு அப்புறமா நானே குளிக்க வைச்சுக்கிறேன், மழை தூரலா இருக்குல"ன்னு சொல்லவும், சரின்னு நான் குளிக்க போயிட்டேன்,

அப்ப ரஞ்சித் சொன்னான் " தேஜாக்கா, என்னை பார்த்து  உங்க அம்மா பயந்து போய் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கிட்டங்க,  வா நாம டிவி பார்க்கலாம்," - டொயிங்(!) 
(இப்படி அடிக்கடி பல்பு வாங்கறதே வேலையா போச்சு)
-------------------------------------------------------------------------------------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடுவதற்காக கட்டிலுக்கு  அடியில் வைத்திருந்தேன். தேஜாவும் , ரஞ்சித்தும் விளையாடிட்டு இருந்தவர்கள், கட்டிலுக்கு அடியில் இருந்த தண்ணீரை ரஞ்சித் கொட்டி விட,  நல்ல வேலையாக யார்மேலயும் படாமல் கீழ கொட்டிடுச்சு. ஆனாலும் பதட்டத்துடன் " இவ்வளவு இடம் இருக்க கட்டிலுக்கு அடியில இருந்த தண்ணிய கொட்டிடியே , சுடு தண்ணி கால்ல பட்டா எனன ஆகி இருக்கும்ன்னு" -  சத்தம் போட சார் அழுகையுடன் கோபமாக வெளிநடப்பு செய்து விட்டார் .

தேஜாவுக்கு வந்ததே கோபம் " நீ ஏன் என் friend - எ திட்டினே , பார் அவன் அழுதுட்டே போறான் பார், தண்ணிய நீ ஏன் கீழ வெச்ச??? " - :((((
வாஸ்தவமான பேச்சு தான ன்னு நான் யோசிக்கும் போதே வந்தார் சார் (ரஞ்சித்)

" நீங்க ஏன் அக்காவோட frienda  திட்டினீங்க . அக்கா அழறா பாருங்க " (ங்கே )

"யாருடா அக்கா friend "?? -

"நான் தான் (!) "-         - ரஞ்சித் சொல்ல டொயிங்!

- -எப்படி  எல்லாம் யோசிக்கறாங்கப்பா !
----------------------------------------------------------------------------------

சென்ற வாரம் கொடைக்காணல் செல்வதற்கு முன்பாக என் நாத்தனாரின் வீட்டிற்கு சென்றிருந்தோம்,  அங்கு பக்கத்தில் இருந்த கிரௌண்ட் -இல்  குழந்தைகளுக்கு ஓட்ட பந்தயம் வைத்து விளையாடி கொண்டிருந்தோம். அப்போது ஒரு 8 வயது பெண் எங்கள் அருகில் வந்து நின்றாள். நானும் விளையாட்டு மும்மரத்தில் சரியாக கவனிக்க வில்லை .  தேஜா அந்த பெண்ணிடம் எதோ பேசி கொண்டிருப்பது தெரிய என் கவனம் தேஜா மீது சென்றது ,

"நீயும் எங்க கூட விளையாட வறியக்கா"

"ஆமாம்" -
"உங்க வீட்ல அம்மா தேட மாட்டாங்களா"
"இல்ல தேட மாட்டங்க"
சரி இருன்னு சொல்லிட்டே "அம்மா இந்த அக்காவையும் நாம விளையாட்டுல சேத்திக்கலாமா"  - தேஜா கேட்கவும்
சரி ன்னு சொன்ன நான் என்னை நினைச்சு நானே ஒரு நிமிஷம் வெட்க பட்டேன் . அதே  சமயம் பெருந்தன்மையா  யோசிக்கறாலேன்னு பெருமையா இருந்தது .
அப்ப என் நாத்தனாரின் பெண் "இது ஒரு குட்டி அபி" ன்னு  (அபியும் நானும் படத்துல வர மாதிரின்னு)  சொல்ல எனக்கு ரொம்பவுமே சந்தோசமா இருந்தது ,

"அடுத்தவர் உணர்வுகள் நீ புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாய் ,
கண்ணே!  நீ வளருகிறாய் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் வெளிகாட்டுகிறாய்"

2 comments:

  1. மழலைகளை பற்றி எழுதினால், இந்த நாள் முழுதும் படித்து கொண்டிருக்கலாம்...

    இப்போது தான் எங்க வீட்டுல சுட சுட பார்த்து விட்டு வந்தேன்..

    ReplyDelete
  2. நீங்கள் கூறியிருப்பது போல குழந்தைகள் செய்யும் குறும்புகளை எவ்வளவு தான் பேசினாலும் சலிக்காது , அதுபோல குழந்தைகளிடம் எவ்வளவு தான் வாங்கி கட்டி கொண்டாலும் அதுவும் சுகமே .

    ReplyDelete