Friday, July 16, 2010

குட்டீஸ்

கதைகளை கேட்பதோடு மட்டும் அல்லாமல் கதாபாத்திரமாக மாறிவிடுவது எங்கள் வீட்டில் ரொம்ப பிரபலம். அதாவது,  பாட்டி வடை சுட்ட கதையில், நான் தான் பாட்டி, நான் வடை சுட, தேஜா காக்கா போன்று வடையை திருடி சென்று விடுவாளாம். கட்டிலின் மேலே சென்று உக்கார்ந்து விடுவாள். பின்பு நானே நரியாக மாறி சரியாக டயலாக்  சொல்ல வேண்டும், அவ இஷ்ட பட்டா வடைய கீழ போடுவா, இல்லன்னா ஏமாந்த நரியாக திரும்பி வர வேண்டும்,  இது மாதிரி நாங்க படிக்கற ஒவ்வொரு கதைகளிலும் ஏமார்ந்த கதா பாத்திரம் என்னுடையது.

அந்த வரிசையில, கண்ணன் வெண்ணைய திருடி சாப்பிட்ட கதை தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு போர் அடிச்சா, இந்த நாடகத்த தான் முதல்ல விளையாடனும்னு சொல்லுவா. போனா வாரம் ஒரு நாள்,
  "அம்மா, நீ தான் கண்ணா மம்மியாம் , நீ வெண்ணைய கடைஞ்சு மேல வை" ன்னு சொல்லிட்டே இருந்தா.
நான் ஏதோ அசதியில இருந்ததால "நான் கண்ணா மம்மி எல்லாம் இல்ல, தேஜா மம்மி தான்" ன்னு சொல்ல, ஒரு குச்சி எடுத்துட்டு வந்து "மந்திரம் சொல்ற சுதி (or
சுஜி) சொல்றேன், தேஜா அம்மாவை, கண்ணா அம்மாவா  மாத்துன்னு" சட்டுன்னு சொல்லவும், (உபயம்: சுட்டி டிவி, எனன தொடர்ல இப்படி வரும்னு தெரியல)  அதுக்கு அப்புறமா விளையாடாம இருக்க முடியுமா!

(கதைகள சொல்றத காட்டிலும், நடிச்சு காமிக்கறதால creativity  வளர  கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, ஒரு டயலாக் இப்படிதான் சொல்லனும்னு இல்லாம, அந்த நிமிஷத்துல அவங்களுக்கு தோன்றத சொல்லும் போதும், இந்த கதைய இப்படி மாத்திக்க்கலாமான்னு குழந்தைகளே கேட்க்கும் போதும் நமக்கு அது புரியும், (ஆனா பல சந்தர்ப்பங்கள்ல நம்ம மூக்க உடச்சுடுவாங்க, கவனமா இருக்கணும்!)

No comments:

Post a Comment