Friday, April 9, 2010

தேஜா

" மிச்சமான மூணு ரூபாயில ஐஸ் கிரீம் சாப்பிட்டேன்  ஆ................"

இந்த விளம்பரம் தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும், இப்போ
" மிச்சமான மூணு ரூபாயில கருவாடு சாப்பிட்டேன் ஏய் சீ நாத்தம்"
"மிச்சமான மூணு ரூபாயில மிளகா சாப்பிட்டேன் ஐயோ காரம்"
இப்படியா தொடருது ........................


-------------------------------------------------------------------------------------------------------
இந்த வாரம் தேஜா பாட்டி (என் மாமியார்) வீட்டில் டேரா போட்டிருக்கிறாள்.
நேத்து வீட்ல இருந்த "ரோசி" நாய் வாள பிடுச்சு இழுதுட்டா. சாதாரண நாட்டு நாய் தான் ஆனா அது எதுவும் செய்யாது . இவ சொல்றது எல்லாம் கேட்கும் . இவளுக்கும் ரோசி மேல ரொம்ப பிரியம் , (இருக்காதா  பின்ன, சாப்பாடு ஊட்டும் போது அம்மா எனக்கு ஒரு வாய் ரோசிக்கு ஒரு வாய் , ரோசி பாவம்னு சொல்லி பாதி சாப்பாட்ட ரோசி தலையில ! (இல்ல வாயில)  கட்டி விட்டுடுவா.)

வாள பிடுச்சு இழுத்ததுக்கு எங்க மாமியார் கொஞ்சம் பயத்துடன் அதிகமாகவே
திட்டிடாங்க . மேடம் ஒரே அழுகை ......... அழுதுகிட்டே "இருங்க இருங்க உங்கள என் அம்மாயி (எனது அம்மா) கிட்ட சொல்லி தரேன் என்று சொன்னது மட்டும் இல்லாம , எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தர சொல்லி பிடிவாதம் பிடிக்கவும் சரி எனன தான் சொல்றான்னு பார்க்க போன் பண்ணி தந்தேன் ,

 எங்க அம்மா கிட்ட "இந்த பாட்டி எனன திட்டிகிட்டே இருக்காங்க, நீ அவங்கள திட்டுன்னு சொல்லிட்டு , அடுத்த செகண்டே எங்க மாமியார் கிட்ட போன் கொடுத்து எங்க அம்மாயி உங்கள திட்டறாங்க நீங்களே வாங்கிகொங்கன்னு சொல்றா"

எங்க அம்மாவுக்கும் எதுவும் புரியல . எங்களுக்கும் தான்  நானும், எங்க மாமியாரும் சேர்ந்து திரு திரு திரு ன்னு முழிக்க வேண்டியது ஆயிற்று, :) (உன்ன இப்படி எல்லாம் பேச சொல்லி யாருடா சொல்லி தர்றா.................
------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment