Friday, April 23, 2010

காலையில் எழுந்த கோபம்

இன்று காலை 6  மணிக்கு கரண்ட் கட் . இந்த விஷயம் என் கோபத்திற்கு காரணம் அல்ல . இது நமக்கு பழகிப்போன ஒன்று தானே ... வெளிச்சமும், காற்றும் பற்றாகுறை காரணமாக ஜன்னல், கதவுகளை திறந்த போது கேட்ட உரையா(சா)டல் என்னை கோபத்தில் ஆழ்த்தியது.

எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருப்பவர்கள் காலையிலேயே வாசலில் அமர்ந்து கொண்டு அந்த வீட்டு மருமகளை பற்றிய பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போனார்கள். அந்த மகனும் சேர்ந்து கொண்டுதான்.

அந்த பெண்ணிற்கு (மருமகளுக்கு) குழந்தை பிறந்து (சிசேரியன்)  இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள் . இன்னும் இரெண்டொரு வீட்டுக்கு வந்துவிடுவார்களாம்.  அந்த பெண்ணின் அம்மா வீடு 2  தெரு தள்ளி தான் உள்ளது,  அம்மா வீடு பக்கத்தில் இருந்தாலும் சென்ற வாரம் வரை அந்த பெண் வேலைக்கும் சென்று வந்து , கணவன் வீட்டில் தான் இருந்தாள் ,  இப்ப பிரச்சனை என்னன்னா , குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை நேராக கணவன் வீட்டுக்கு தான் வரவேண்டுமாம் . அங்கு தான் குழந்தை வளர வேண்டுமாம் . அவளது வீட்டுக்கு எடுத்து செல்ல கூடாதாம் ,  கொஞ்ச நாள் தன அம்மா வீட்டில் தங்க விரும்புவதாக  அந்த பெண் தன கணவனிடம் சொல்லி இருக்கிறாள் போலும் . (எனக்கு தெரிந்து அந்த பெண் அதிர்ந்தும் கூட பேசமாட்டாள்) . இந்த விஷயத்தை தன அம்மாவிடம் சொல்லிகொண்டிருக்கிறான் அந்த பையன்
"அவ நேரா இங்க வராட்டி அவள diverse  பண்ணிவிடுவேன் , அப்படி எனன அம்மா வீடு கேட்க்குது , என் குழந்தையை நானே வளர்த்து கொள்வேன் , அவ ஒன்னும் தேவை இல்ல...................... " - இப்படி ஆணாதிக்கதோட பேசிட்டு இருந்தான் .

"diverse "  இந்த வார்த்தை எனன ஆண்களின் ஆயுதமா ? இதை சொல்லி பயமுறுத்த?
 பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண் என்றால் வேறு வழி இல்லாமல் நீ சொல்வதை  சகித்து கொள்ளலாம் . அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் , "சரிதான் போடா" என்று அந்த பெண் சொன்னால் இவனால் எனன செய்ய முடியும், அதிக பட்சம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடியும்? உன்னுடன் குடும்பம் நடத்தி உன் பிள்ளையை தானே சுமந்தாள்? அவளது வேதனையை , ஆசையை புரிந்து கொள்ள மாட்டாயா ?

ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த சமயத்தில், அவள் மனதில் சில குழப்பங்கள் வந்து தான் போகும் . எப்படி இந்த குழந்தை வளர்க்க போகிறோம் நல்ல தாயாக நம்மால் இருக்க முடியுமா? இப்படி. ............................ அதுமட்டும் இல்லாமல் உடல் ரீதியான பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். இதை எல்லாம் அம்மாவிடம் வெளிப்படியாக சொல்ல முடியும்,  மாமியாரிடம் சொல்ல முடியுமா ? சொல்லலாம் (!) அந்த மாமியாரும் நட்புடன், பாசத்துடன் தன் மகளை போல கவனித்து கொள்பவராய் இருக்கும் பட்சத்தில்.     

சில பெண்களுக்கு பிறந்த குழந்தையை சரியாக தூக்க கூட தெரியாது , குழந்தைக்கு அசௌகரியம் இல்லாம சரியாக பால் புகட்டவும் தெரியாது ,  அவளது உடலில் சோர்வும் நீங்க வேண்டும், அதற்க்கு சரியான ஓய்வு தேவை படும். 3 கிலோ குழந்தையை கூட ரொம்ப நேரம் வெச்சு இருந்தா கை, வயிற்று பகுதி எல்லாம் வலி ஏற்படும் . அந்த ஓய்வ மாமியார் வீட்ல எதிர் பார்க்க முடியாது , இப்ப இருக்கிற வயதானவர்களும் அந்த கால கட்டத்தை கடந்து வந்தவங்கன்னாலும் அவங்க கிட்ட இருந்து வர வார்த்தை "என்னமோ உலகத்துல இவ மட்டும் தான் பிள்ளைய பெத்த மாதிரி" . ரொம்ப தான் நடிக்கறா , எப்ப பார்த்தாலும் முடியலைன்னு ....நாங்கெல்லாம் அந்த காலத்துலன்னு தொடங்கி ......... ஆரம்பிச்சுடுவாங்க ,

அதோட அந்த பையன் தன் மாமியாரை  (மனைவியின் அம்மா) பற்றி நிரம்ப குறை சொல்லி கொண்டு இருந்தான் , அவர்களும் உன் அம்மாவிற்கு சமமானவர்கள் தானே? அவர்கள் தன் பெண்ணை கொஞ்ச நாட்கள் தன்னுடன் வைத்து  கொள்ள பிரிய படுகிறார்கள் . இதற்ககா இவ்வளவு ஏச்சுக்களும் , பேச்சுகளும் ?

ஆண்களே!  உங்களுக்கு எப்படி உங்க அம்மா, அப்பா முக்கியமோ அது போல தான் பெண்களுக்கும் , கல்யாணம் முடிஞ்சதுன்ற ஒரு காரணத்துக்காக அடுத்த நிமிஷமே அப்பா, அம்மாவை மறக்க முடியாது, என் குடும்பம், என் வீடுன்ற எண்ணமெல்லாம் வர கொஞ்ச நாட்களாவது தேவை படும், உங்களை பெற்றவர்கள் மட்டும் தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்து , வளர்த்து உங்களை ஆளாக்கினார்களா ?  ஒரு பெண்ணை புரிந்து கொள்ள முடியாதவன் , அவளது ஆசைகளை ,உணர்வுகளை மதிக்க தெரியாதவன் எதற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் ?

இது சிறிய விசயமாக தெரியலாம் , தன் மனைவியை பற்றி , அவளது குடும்பத்தை பற்றி ஊருக்கே கேட்க்கும் படி பேசிகொண்டிருக்கிறாயே, பெண்களை பெற்றவர்கள் என்றால் கேவலமா?  

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்"

நீயும் இந்த சூழலை சந்திக்க வேண்டி வரலாம்.....................

2 comments:

  1. oru penin adhangam unmaiyanadhu..... nengal kuripitrukum aangalin mananilaiyum othukolapadawendiyadhu dhan....

    theerwu.... yedhirthum thanithum wazhwadharkum thayar aga wendiyadhu dhan.... kuraiyum polambalum theerwuku wazhi kondu waradhu.... manidhathai potrawum, potradhawanai midhikawum thayar agawendiya sulnilai uruwaga wendum.

    mendum kurugiraen.... perchanai kalyanathuku pinbu yerpaduwadhu ala. kalyanamae perchana than. adhae unarama othukamae theerwa nooki nagara mudiyaadhu.

    ungal kuzhandhaiyai yawadhu theliwa iruka udhawungal.

    ReplyDelete
  2. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக இருப்பதை பார்க்கும் போது நீங்க சொல்றதும் சரிதான் என்பது போல தோன்றுகிறது - நன்றி traveller

    ReplyDelete