Tuesday, May 18, 2010

ஸ்கூல்- 2

ஸ்கூல்

summer vacation  முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 10 , 15 நாட்களே உள்ள நிலையில், இன்னும் கல்வி கட்டணம் அறிவிக்க படாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. அரசு அறிவித்துள்ள கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளில் சில , பள்ளியை மூடுவதாகவும் , இன்னும் சில பள்ளிகள் வழக்கம் போல செயல்படும், ஆனால் கல்வி கட்டணம் மட்டும் தற்போதைக்கு வசூலிப்பது இல்லை எனவும் அறிவித்துள்ளது இன்னும் சில பள்ளிகளில் வசூல் வேட்டையும் முடிவடைந்தது . இந்த நிலையில் அரசு அறிவித்த கட்டணத்தை கட்டாயம் ஏற்க வேண்டும் எனும் பட்சத்தில்  அதிகப்படியான கட்டணத்தை மீண்டும் மாணவர்களிடம் ஒப்படைக்குமா பள்ளி நிர்வாகம்?

இதனை நாட்களாக ஏகத்துக்கும் , pre -kg க்கு கூட குறைந்த பட்சம் Rs . 15000 / - வசூலித்து பழகியவர்களிடம் , 3 இல் ஒரு பங்கு கட்டணத்தை வசூலிக்க சொன்னால் இதை எப்படி ஏற்பார்கள். இதில் ஆசிரியர்களுக்கு தான் முதல் இழப்பு, இந்த வருடம் அவர்களின் ஊதியம் உயராது , இதனால் சில ஆசிரியர்கள் தவிர்த்து , பல ஆசிரியர்களும் தங்கள் ஊதியத்தை உயர்த்தி கொள்ள tuition  நடத்தியே தீர்வார்கள். இதை தனியார் பள்ளிகளும் கண்டும் காணாமலும் விட்டு விடுவார்கள். இதனால் மனரீதியாக பாதிக்க படுபவர்கள் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தான் ,

இதனை நாட்களும் கல்வி வியாபாரம் ஆக்கபடுவதை அரசு கண்டும் காணாமலும் விட்டு விட்டது ஏனோ ? எப்ப கல்வித்துறை தனியார் வசம் விடப்பதோ , அன்றிலிருந்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து இருக்க வேண்டும் , ஆனாலும் இந்த நிலையை இன்னும் வளர விடாமல், இப்பவாவது கல்விபுரட்சி , கல்வி கட்டண புரட்சி ஏற்ப்பட்டது நலமே .

கல்வியை சேவையாக நினைத்து பணிபுரிய எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் திரு.கல்யாணி அவர்களை போல ஒரு சிலரை பார்க்க முடிகிறது , மற்றபடி கல்வித்துறை நல்லா லாபம் அளிக்க கூடிய ஒரு தொழிலாகவே இருக்கிறது, பல புதிய வரவுகளான இன்டர்நேஷனல் pre -schools வெப்சைட் ல கூட franchisee option ஐ படித்தால் தெரியும், ஒரு pre -ஸ்கூல் ஆரம்பிக்க 5 முதல் 10 லட்சங்கள் வரை தேவை படும் . இதை ஒரே வருடத்தில் நீங்கள் பெற்றிடலாம் என்று இருக்கிறதை பார்க்கும் போது இது ஒரு நல்லா businees தானே.

இங்கு எங்கள் கோவையில் , foundries  வைத்திருந்த பல தொழில் அதிபர்களும் தற்போது இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இன்டர்நேஷனல் பள்ளிகளுக்கும் இந்த  கட்டண விகிதம் பொருந்துமா என்பதும்  தெரியவில்லை. உலகமயமாக்களில் corporate கலாச்சாரத்தில் கோவையில்  மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் வந்துவிட்டது. பல ஆயிரங்கள் வசூலிக்கபடும்  இந்த பள்ளிகள் எல்லாம் பெயர் அளவிற்கு தான் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் , பாடத்திட்டம் என்னவோ C B S E தான் ,  இதற்கும் அங்கீகாரம் கொடுத்து வளர்த்து வருகிறோம் ,

ஒரு புறம் சமச்சீர் கல்வி, பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருக்க மாறுபட்ட இந்த கல்வி திட்டத்துக்கு என்று வரும் விடிவு காலம்?  இதற்க்கு தீர்வு தான் எனன???????????

5 comments:

  1. Theja Amma, You are exactly right. Education is purely a business nowadays and no one is doing it as a service.

    The only solution for this, we should admit our kids in Govt schools. Nowadays Govt schools are good in standard too.

    All your blogs are very interesting to read. Nice job.

    ReplyDelete
  2. வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி thiru. duraiappan . நேரம் இருப்பின் வருகை தாருங்கள்

    ReplyDelete
  3. ON FOLLOWING MR.DURAIAPPANS COMMENT, we should be clear on what is education, what our children really need? what u want them to be in future ? money earning machine, for that current education institutions are enough. as bussiness investment can be rectified. there are alternatives, isha group of schools, b schooling, orelse practical learning. risk chooses the innovative path.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Duraippan மற்றும் traveller குறிப்பிட்டது போல govt ஸ்கூல்ல குழந்தைய படிக்க வைத்தால் .......... இதை பற்றி அடுத்த பதிவில் இடுகிறேன்,

    அடுத்த பதிவை எழுத வைக்க தூண்டிய duraippan மற்றும் traveller க்கு நன்றி

    ReplyDelete