Monday, April 19, 2010

கண்ணன் என் காதலன்

"மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்" ன்னு தொடங்கற திருப்பாவை பற்றி எங்கள் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது தான் ஆண்டாள் பத்தியும் அவங்க கண்ணன் மேல வைச்சுருந்த அந்த காதலயும் உணரமுடிஞ்சது . அதுக்கு அப்புறமா திருப்பாவை பாடல்கள தேடி கண்டு பிடிச்சு (உபயம் திரு சுகுமாரன் அவர்கள்- எங்கள் குடும்ப நண்பரும் அரசு கலைகல்லூரி பேராசிரியர் )   அதுவும் திருமதி. எம் எல் வசந்தகுமாரி அவர்களின் குரலில் அந்த பாடல்கள கேட்கறதே ஒரு சுகம் .

"நெய்யுண்ணோம் பால் உன்னோம்னு " மார்கழி மாசத்துல விரதமிருந்து  , உடம்பு சரி இல்லாம போய் ,   "உன் உடம்புக்கு நெய்யும் பாலும் சாப்பிட்டே  தேற மாட்டேங்குது, .(!) இதுல விரதம் வேறயா" ன்னு  வாங்கி கட்டிகிட்டது  ஒரு தனி கதை .

 மார்கழி மாசத்துல ரேடியோல திருப்பாவை , திருவெம்பாவைல இருந்து தினம் ஒரு பாடல சொல்லி அதோட விளக்கத கேட்க்கும் போது கண்ணபிரான் மேலயும் ஒரு தீராத காதல் .   மார்கழி மாசத்துல டிடில குட்டி பத்மினி ஆண்டாளா  நடிச்சத பார்க்கும் போது  நான் என்னையே ஆண்டால நினச்ச காலம் எல்லாம் உண்டு, இப்படியா என்னோட கண்ணன், ஆண்டாள் காதல் தொடர்ந்தது,  இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லறேன்னா,    போன வருஷம் "கிருஷ்ணஜெயந்தி" க்கு எங்க வீட்டு குட்டி பசங்களுக்கு கிருஷ்ண, ராதா  மாதிரி மேக்- அப் போட்ட போட்டோவ பார்த்ததுக்கு அப்புறமா இத  எழுதணும்ன்னு  தோனுச்சு .

ரஞ்சித்தும் , தேஜாவும்
நாங்க எங்க அலுவலக வேலைய எல்லாம் முடிச்சுட்டு ராத்திரி 10 மணிக்கு இந்த போட்டோவ எடுக்கும் போது (கிருஷ்ண & ராதா) ரெண்டு பேருக்குமே தூக்கம் வந்துடுச்சு .அதனால சோகமா இருக்காங்க ,  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ஆண்டாள் போல தான் போடணும்னு நினைச்சோம் நேரம் இல்லாததால  ராதாவாயிடுச்சு (!).


2 comments:

  1. mmmm.... krishnar melayum aandal melayum kaadhal irukunu neraiya per soli ketrukaen... enala than unara mudila.... karanam... uyir ula warai than kadhalumo...!!!!1

    ReplyDelete
  2. ungaloda entha vaarthai corvai romba nalla eruku, aandalla aaramchu thejasvi varaikum vanthathu puduchuruku,,,

    payanam thataratum

    ReplyDelete